தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகள் வேதனை!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடும் உச்சம் கண்டு வந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல் விலை:
சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் புதிய விலை நாள் தோறும் காலை 6 மணி முதல் அமலுக்கு வரும். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழக பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவக்கம் – அரசின் வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் குறிப்பிட்ட 3 இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இந்த செய்தி மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ எட்டியுள்ளது. அதன்படி காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.17 ஆகவும் குமராட்சி பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 ஆகவும் உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் கொடைக்கானல் பகுதியில் இன்றைய (ஜூன் 14) நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.30 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் இந்த 3 பகுதிகளில் பெட்ரோல் விலை உச்சத்துக்கு, போக்குவரத்து செலவு அதிகமாக இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. தமிழக அரசு இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.