பெட்ரோல் & டீசல் விலை அதிரடி குறைவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. அதனால் தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை குறைவு
உலக நாடுகளில் கொரோனா காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றன. ஆனால் இலங்கை நாட்டில் தொடர்ந்து நிதி நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அதனால் நிதி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டது. இதில் குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் 5 முறை உயர்த்தப்பட்டது. மேலும் இங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கேஸ் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவு இருப்பு இல்லை.
Exams Daily Mobile App Download
அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் ஒருவர் வாங்குவதற்கு இங்கு ஒரு நாள் அளவு காத்திருக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது.
அதனால் இந்நாட்டில் தற்போது பெட்ரோல், டீசல் விலை அந்நாட்டு மதிப்பில் தலா ரூ. 20 என்று அந்நாட்டு சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் குறைத்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி இருந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இதையடுத்து இலங்கையில் குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இரவு 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இந்திய மதிப்பில் ஆக்டேன் 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஆக்டேன் 95 ரக பெட்ரோல் விலை ரூ.119.87க்கும் விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து சூப்பர் டீசல் விலை லிட்டருக்கு ரூ.113.21க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த அதிரடி விலை குறைப்பு நேற்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் கடும் நிதி நெருக்கடியான நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.