தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – பதற்றத்தில் மக்கள்! தலைமைச் செயலாளர் ஆலோசனை!

0
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - பதற்றத்தில் மக்கள்! தலைமைச் செயலாளர் ஆலோசனை!
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - பதற்றத்தில் மக்கள்! தலைமைச் செயலாளர் ஆலோசனை!
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – பதற்றத்தில் மக்கள்! தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை தூக்கியுள்ளது. பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூரில் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அம்மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இவ்வாறு பாஜக அலுவலகத்தை குறிவைத்து தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2,000 காவலர்கள் கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து மக்களை பாதுகாக்கவும் ,கலவரங்களை தடுக்கவும் ‛ரேப்பிட் ஆக்சன் போர்ஸ்’ என்ற பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கமிஷனர் எச்சரித்துள்ளார்.

இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க.. 60 ஆண்டுகளுக்கு பின் வானில் நிகழும் அதிசயம் – நாசா அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கோவை சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் , கோவை மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல ஐ.ஜி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக காவல்துறை தலைவர், சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் தற்போது நடந்து வரும் வன்முறைகளை தடுப்பது குறித்து குற்றவாளிகளை கண்டறிவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!