கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை? உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி!
ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போர் எதிரொலி:
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பிரச்சனையில் அதிக அளவு பாதிப்புகளை உக்ரைன் சந்தித்து வருகின்றது. இந்த போர் பாதிப்பினால் பங்கு சந்தைகள் கடுமையாக சரிவடைந்துள்ளது. ஆனால் மற்றொரு புறம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலின் விலை 100 டாலராக உயர்ந்தது. டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை இன்னும் அதிகரிக்கும்.
தமிழக அரசு சார்பில் நாளை (பிப்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2014ம் ஆண்டிற்கு பிறகு கச்சா எண்ணெயின் விலை 100 டாலராக உயர்ந்துள்ளது. உலக நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. நாட்டின் பெட்ரோல் டீசல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 85% கச்சா எண்ணெய் இறக்குமதியையே சார்ந்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!
நாட்டின் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்றவை கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரிக்கப்படும். கச்சா எண்ணையின் விலை உயர்வால் மக்களின் அன்றாட தேவைகளின் விலை வாசியும், பெட்ரோல்,டீசல் விலையும் அதிகம் உயர்த்தப்படும். விமானம், ரயில், பேருந்து போன்றவைகளின் போக்குவரத்து கட்டணம் உயரும். இதனால் சமையல் கேஸ் விலை, உலோகங்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.