இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் பயன்பாடு – எண்ணெய் கழக தலைவர் தகவல்!
கொரோனா பரவலுக்கு முன்பாக இருந்தது போன்றே தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படும் மீண்டும் அதிகரித்து உள்ளதாக இந்திய எண்ணெய் கழக தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா பரவல்
கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை அச்சுறுத்தியது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதனால் அனைத்து அலுவலகங்கள் செயல்படாமல் போனது. ஊரடங்கு காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே சென்று வந்தனர். பின்னர், இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் , எரிபொருள் தேவை அதிகமாகியது.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடல் – ‘இந்த’ இடங்களில் மட்டும்!
அதன் தாக்கமாக கச்சா எண்ணெய் விலை அதிகமாக உயர்த்தப்பட்டு, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்கள் எதிர்பாரா வண்ணம் இருந்து வந்தது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் கொரோனா 2ம் அலை தாக்கம் அதிகமாகியதால், அனைத்து மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை மக்கள் வெளியே செல்லாத போதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகபட்சமாக உயர்ந்தது.
TN Job “FB Group” Join Nowg
இதனை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது. கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. இதன் மூலம் மொத்தமாக 23 லட்சத்து 70 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கபட்டுள்ளது. மேலும் 54,59000 டன் டீசல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக இந்திய எண்ணெய் கழக தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.