கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளி விவகாரம் – உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியை திறக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி பள்ளி நிர்வாகத்திற்கு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். மேலும் வழக்கு ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய உத்தரவு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை மாதம் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்த மாணவிக்கு நீதி கேட்டு மாணவியின் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் – நிறுவனத்தின் CEO வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து பள்ளியின் மீது வழக்கு தொடரப்பட்டு ஒரு மாதத்திற்கு பள்ளி மூடப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. மற்ற மாணவர்களுக்கு தற்போது வரை ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் சிரமபடுவதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் பள்ளியை முழுமையாக திறக்க கோரி பள்ளியின் தாளாளர் மனு தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் போது நீதிபதி, பள்ளியில் இதுபோன்ற நிகழ்வு இனி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார். மேலும் மீண்டும் பள்ளியை முழுமையாக திறக்கும் போது மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டார். இது குறித்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.