ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய கோரி மனு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்ய கோரி பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
பீட்டா மனு தாக்கல் :
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்த்து பீட்டா உள்பட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களுக்கு பிறகே ஜல்லிக்கட்டு தடை நீக்கம் செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மீண்டும் பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்து 102 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21ன் கீழ் விலங்குகளுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
உணவு பொருள் விநியோக நிறுவனங்களின் சோதனை – வருமான வரித்துறையினரின் அதிரடி நடவடிக்கை!
Follow our Instagram for more Latest Updates
மேலும் நாட்டின் கலாச்சாரங்களை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டு பீட்டா உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது என்றும் அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என்றும் மனுவில் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.