பீகாரில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து கொண்டே வரும் நிலையில் பீகார் மாநில அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே மாநிலத்தில் உள்ள தொற்று நிலவரத்திற்கு ஏற்ப அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உணவகங்கள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், “அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அரசு பயிற்சி மையங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரை மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவித்து உள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் மற்ற ஊழியர்களுக்கும் சிறப்பு தடுப்பூசி வசதிகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் எனவும் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.