தமிழகத்தில் ஜூன் 14 முதல் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி – பதிவாளர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 சதவிகித ஊழியர்களுடன் ஜூன் 14 முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.
நீதிமன்ற பணிகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 7 முதல் அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் 30 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 305 பேருக்கு கொரோனா உறுதி – 44 பேர் பலி!
இந்நிலையில் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனுதாக்கல் செய்யும் நடைமுறை முழுவதுமாக நிறுத்துப்படுவதாகவும், அதற்கு மாறாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களை போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் மனுக்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா பரவல் குறைவதன் காரணமாக நீதிமன்றங்களுக்கு தளர்வுகளை பதிவாளர் அறிவித்துள்ளார். அதன் படி ஜூன் 14-ம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.