தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி? வெளியான தகவல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வகை 3-ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 5க்கு பின்னர் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் விளைவாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் மே 10 முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை 30 முதல் 10 ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது ஜூலை 5க்கு பின்னர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின் முடிவில் கொரோனா பரவல் அதிகம் இருந்த 11 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இ-பாஸ் ரத்து, புறநகர் ரயில் போக்குவரத்து, வழிபாட்டு தலங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 100 சதவீதம் செயல்பட அனுமதி, துணிக்கடைகள், நகைக்கடைகள் இயங்க அனுமதி, படப்பிடிப்புக்கு அனுமதி போன்ற தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா தலங்கள் கோவில்கள் திறப்பது எப்போது?
வகை3ல் மட்டும் எல்லாம் அனுமதி உள்ள நிலையில் தொற்று கம்மியாக் உள்ள மாவட்டங்களில் அனைத்து கோவில்கள் குறைந்த அளவு நேரம் தந்து கோவில், சுற்றுலா தளங்கள் அனுமதிக்களாமே!