ஜூன் 16 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
கொரோனா தாக்கம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் குறைந்து வரும் காரணத்தால் அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்று தற்போது வரை உலக நாடுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் நோய் பாதிப்பு கடந்த இரு மாதங்களாக அதிகரித்து வந்தது. இதனால் மாநில அரசுகள் சார்பில் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
ட்விட்டர் (Twitter) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாலோவர்ஸ் குறைவு விளக்கம்!
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை மற்றும் நோய் தொற்றால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 600க்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தும் உள்ளனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்ததால் அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கூடுதல் தளர்வுகள்:
- திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பணியாளர்கள் அனைவரும் கொரோனாவிக்கான ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம்.
- இரவு நேர ஊரடங்கு இரவு 8 மணி முதல் காலை 6 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாரஇறுதி ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
- மதுபான கடைகளுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் பழ கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.