தமிழகத்தில் கோவில்கள் திறக்க அனுமதி? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவலின் காரணமாக 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகளை திறக்க அனுமதி அளித்ததை போல, கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா 2ம் அலை அதிக அளவில் பரவி பலரும் பாதிப்படைந்தனர். அது மட்டும் அல்லாமல் மரணம் அடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின், தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஜூன் 10ம் தேதிக்கு பின்னர் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
பின், அந்த ஊரடங்கு மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பெயரில் நீட்டிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதின் விளைவாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு மக்களின் அன்றாட வாழ்வியல் சூழலை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர். இதனால் தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தளர்வுகளில் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலை அடுத்து கோவில்கள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றது. தற்போது தளர்வுகளில் கோவில்களை நேர கட்டுப்பாடுகளுடன் திறக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் தங்களது மன ஆறுதலுக்காக கோவில் செல்வதற்காக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.