தமிழகத்தில் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி? வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் வரும் ஜூலை 5 காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஜூலை 5க்கு பின் வகை 1 ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் பேருந்து சேவை மற்றும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து சேவை:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் அமல்படுத்தப்பட்ட கடும் ஊரடங்கு கட்டுபாடுகள் காரணமாக தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக மாவட்டங்கள் 3 வகைகளாக, அதாவது வகை 1 ல் 11 மாவட்டங்கள், வகை 2 ல் 23 மற்றும் வகை 3 ல் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை – நேற்று முதல் அமல்!
அதன்படி வகை 2 மற்றும் 3 ல் இடம்பெற்றுள்ள 27 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து, டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள் (பார்சல் சேவைக்கு மட்டும்) போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை 5 காலை 6 மணி உடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஜூலை 5க்கு பின் கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு உள் பேருந்து சேவை இயங்க அனுமதி வழங்கப்படும் என்றும் மற்ற மாவட்டங்களை போல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களில் பார்சல் நடைமுறை நீக்கப்பட்டு கடைகளில் அமர்ந்து டீ அருந்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.