இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் பாதிப்பானது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஜூன் 15 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் சரிந்து வரும் பாதிப்பு வீதத்தை கணக்கில் கொண்டு, சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அம்மாநிலத்தின் அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!!
முன்னதாக மத்திய பிரதேசத்தின் 41 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வீதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உஜ்ஜான் நகரத்தில் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர கார்கோன் பகுதிகளில் தனித்து இயங்கும் கடைகள் மட்டும் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாநில அரசு தொழிற்சங்கங்களுடன் இணைந்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தின் விடிஷா, டிக்காம்கர், குணா, டிந்தோரி, காண்ட்வா, அலிராஜ்பூர் மற்றும் புர்ஹான்பூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.