மே 24, 25ம் தேதிகளில் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவான யாஸ் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 10 கடலோர மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்
ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயல் எதிரொலியாக தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மே 24 மற்றும் மே 25 ஆகிய தினங்களில் பலாசோர், பாத்ரக், ஜகத்சிங்ஹோர், கேந்திரபரா, மயூர்பாஞ்ச், கியோன்ஜார், பூரி, ஜஜ்பூர், கட்டாக் மற்றும் கோர்தா ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
இந்த தளர்வுகளின் போது காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள், பால் பொருட்களை பெற்றுக்கொள்ள காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர கடைகள், தனித்து செயல்படும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக யாஸ் சூறாவளியின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், ஒடிசா மாநிலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த யாஸ் புயல் மே 26 ஆம் தேதி மாலை ஒடிசாவின் பரதீப் மற்றும் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்பதால் அங்கு நிலச்சரிவு ஏற்படும் என கூறப்படுகிறது. இது குறித்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘மே 19 முதல் ஜூன் 1ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும். வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை அனைத்து செயல்பாடுகளுக்கும் முழுமையான தடை இருக்கும். முழு ஊரடங்கு காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாது’ என தெரிவித்துள்ளார்.