ஜூலை 26 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாகலாந்து மாநில அரசு வருகிற ஜூலை 26ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
கொரோனா 2வது அலை காரணமாக இந்தியாவில் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்டுத்தும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தத்ப்பட்டன. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்தது. இதனால் தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. சில மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 – கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
அதில் ஒன்றாக நாகலாந்து அரசு வருகிற ஜூலை 26ம் தேதி முதல் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் (11 & 12) மற்றும் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளில் 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளை மீண்டும் திறப்பது குறித்து ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் ஜூலை 1 முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒட்டுமொத்த நேர்மறை விகிதம் 10.83 சதவீதமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அனைத்து கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களும் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா எதிர்மறை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு அத்தகைய விதிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. மீண்டும் திறக்கப்பட உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் DTF அனுமதியை பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.