தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!

தமிழக்தில் வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும், அனைத்து கடைகளையும் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்கள பணியாளர்கள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பேரிடர் காலத்திலும் அனைத்து அத்தியாவசிய தேவை கடைகள் கட்டாயம் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றே கடைசி நாள்!

இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா நிவாரண நிதி 1.10 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கூறுகையில்,

TN Job “FB  Group” Join Now

கொரோனா பரவல் இருந்தாலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் தொடர்ந்து செயல்பட்டனர். கொரோனாவால் சிறு தொழில் செய்யும் வணிகர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களில் உள்ள வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அனைத்து கடைகளும் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!