அனைத்து மருத்துவ கல்லூரிகளும் உடனடியாக திறக்க அனுமதி – கர்நாடகா அரசு அறிவிப்பு!
கர்நாடகாவில் உள்ள சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான அனைத்து கல்வி நிறுவனங்களையும் உடனடியாக திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளதாக நேற்று (ஜூலை 16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து கொண்டே இருக்கும் சூழலில் கல்லூரிகளை மீண்டுமாக திறக்க கர்நாடகா அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று (ஜூலை 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகாவில் மருத்துவம், பல், ஆயுஷ், நர்சிங் மற்றும் பிற சுகாதார படிப்புகளை வழங்கும் அனைத்து கல்லூரிகளும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கலாம். இருப்பினும், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் வங்கி சேவைகள்!
மேலும் கொரோனா தடுப்பு தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவதாக கண்டறியப்படும் கல்வி நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 2005 ன் பேரிடர் மேலாண்மைச் சட்டம், பிரிவு 188 ன் கீழ் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இதனிடையே கடந்த ஜூலை 12 ஆம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஸ்வத் நாராயண், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்கள், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட உடன் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் முன்னுரிமையின் அடிப்படையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்த தகவல்களை வெளியிட்டு சில நாட்களே ஆன நிலையில், மருத்துவ கல்வி நிறுவனங்களை திறக்க கர்நாடகா அரசு அனுமதி கொடுத்துள்ளது.