இன்று முதல் ஜூன் 10 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – போக்குவரத்துக்கு அனுமதி!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்று முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக ஜூன் 10 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின் படி, இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட உள்ளது. அதாவது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர அம்மாநிலத்தில் பயணத்திற்கான கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பீர் இலவசம் – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
பொதுமக்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை பதிவு செய்யும் மாவட்டங்களான ராஞ்சி, ஜம்ஷெட்பூர், ஹசாரிபாக் மற்றும் தன்பாத் உள்ளிட்ட மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களில் துணி கடைகள், நகை மற்றும் காலணி கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.