மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி – புதுச்சேரி அரசு உத்தரவு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பல நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் இன்று திறக்கப்பட்ட நிலையில், மதுவை வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மதுபான கடைகள்:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 94.3% – மத்திய சுகாதாரத்துறை!!
அதன்படி 44 நாட்களாக திறக்கப்படாத மதுபான கடைகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான பார்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில் நேற்று மாலை மதுக்கடை உரிமையாளர்களுடன் மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், மதுபான கடைகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மது வாங்க வருவோர் மற்றும் மதுக்கடை ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மது வாங்க வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மதுபான கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மதுக்கடை உரிமையாளர்கள் டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர்.