TCS நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இனி நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம்!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அனைத்து ஐடி நிறுவனங்களிலும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், TCS நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வண்ணம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனம்:
நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். தற்போது டாடா நிறுவனம் நல்ல வளர்ச்சியடைந்து வருவதால் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக விப்ரோ, இன்போசிஸ் போன்ற அனைத்து நிருவனங்களுமே work from home முறையை தான் பின்பற்றியது.
பள்ளிகள் காலை 7 மணி முதல் 12 மணிவரை மட்டுமே திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்கள் மீண்டும் பழையபடி அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதெற்கிடையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது டிசிஎஸ் நிறுவனம் 25*25 மாடல், occasional operating zones (OOZ), மற்றும் ஹாட் டெஸ்க் போன்ற சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் உயர் மட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்ற தொடங்கிவிட்டனர்.
அடுத்த மாதத்தில் மேலும் சில பணியாளர்களை அலுவலத்திற்கு அழைத்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனமும் பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கும் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.