தமிழக தனியார் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் !
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் மாவட்டந்தோறும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றினை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவே நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் செயல்படும் 3 தனியார் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
தென்காசி ஸ்ரீ ராம கிருஷ்ணா பள்ளி வேலைவாய்ப்பு :
தென்காசி ஸ்ரீ ராம கிருஷ்ணா பள்ளியில் TGT & PGT பணிக்கு பல்வேறு எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு UG/ PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 20ம் தேதியான நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.