தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

பணி நிரந்தரம்:

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய பாடத்திட்டங்களுக்காக ரூ.5000 தொகுப்பூதியத்தில் கிட்டத்தட்ட 16,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். இதன் பின்னர், தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.10000 மாத சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சட்டமன்ற தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்திர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர் என திமுக சார்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது.

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரைக்கும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்திரம் செய்யப்பட வேண்டும் என ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், முதல்வர் தற்காலிக ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்வதில் கவனம் செலுத்தி உடனடியாக அது குறித்தான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!