தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்? முதல்வரிடம் வலுக்கும் கோரிக்கை!!
திமுக தனது தேர்தல் சமயத்தில் வாக்குறுதியில் கூறியனவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பணி நிரந்தரம்
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது வாக்குறுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாட உள்ளிட்ட பாடப்பிரிவில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தொடக்கத்தில் ரூ.5000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்பின்பு இவர்களுக்கு படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரூ.10000 ஊதியமாக பெறுகின்றனர்.
FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உயர்வடைந்த வட்டி விகிதம்!
Exams Daily Mobile App Download
ஆனால் தற்போது கிராமப் பகுதிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட இதை விட அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். இவ்வாறு பட்டம் பெற்று 10 ஆண்டுகளாக மிகவும் குறைவான ஊதியத்தில் பகுதி நேர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இதில் பலருக்கு 45 முதல் 50 வயது நிரம்பியவராக உள்ளனர். இதனால் இவர்களால் வேறு வேலைக்கும் செல்ல முடியாது. அதனால் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்