தமிழக கோவில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் இயங்கும் அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவோருக்கு பணி நிரந்தரம் இன்னும் 1 மாதத்திற்குள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில்களில் பணி நிரந்தரம்:
தமிழகத்தில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது அறநிலையத்துறை ஆகும். இந்த துறை சார்பில் மாநில அளவில் ஒரு தலைமை செயலகம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் தற்காலிகமாக 5 ஆண்டுகள் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 20 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மணிப்பூர் அரசு அறிவிப்பு!
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இது குறித்து கூறுகையில், தமிழக கோவில்களில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்கள் ஒரு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவை அளித்து வாடகைதாரர் ஆக ஏற்று உத்தரவு வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலமாக குடமுழுக்கு மராமத்து பணிகள் நடக்காமல் இருந்துள்ளது. இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் அன்னதானம் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே அன்னதான பொருட்கள் மட்டுமே வழங்கப்படும். விரைவில் தமிழகம் கொரோனா பரவலில் இருந்து மீண்டு நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.