தமிழக ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு!

0
தமிழக ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழக ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழக ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படி உயர்வு பெற்று 34% அகவிலைப்படியை பெற்றனர். அதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், அரசின் தொகுப்பூதியம், நிலைப்படுத்தப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் பெறுபவர்கள் மாதந்தோறும் ரூ.2500 பெற்றால் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

RRB குரூப் D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – நாளை (ஆக. 23) ஆன்லைன் மாதிரி தேர்வு!

இதே போல் ரூ.2500க்கும் மேல் பெறுபவர்களுக்கு ரூ.100 உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும். இதனை தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றி உயிரிழந்தவர்களின் மனைவி அல்லது அவர்களின் குழந்தைகளுக்கு ரூ.645 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 373 சதவீதமாக ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!