தமிழக இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலை – சம்பளம்: ரூ.11,916/- || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், இளைஞர் நீதிக்குழுமத்தில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தமிழக இளைஞர் நீதிக்குழும வேலைவாய்ப்பு விவரங்கள்:
உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 31.08.2022 தேதியின் படி, அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய பதவிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்படிப்பு பெற்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஒரு வருடம் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.11,916/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு என https://perambalur.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.10.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்