ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 10ம் தேதி கடைசி நாள்!

0
ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூன் 10ம் தேதி கடைசி நாள்!
ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூன் 10ம் தேதி கடைசி நாள்!
ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 10ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை மேம்படுத்த வள பயிற்றுநர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கிராமப்புறங்களை மேம்படுத்த தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, உடுமலைபேட்டை, குண்டடம் மற்றும் பொங்கலூர் உள்ளிட்ட வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இங்குள்ள சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக தற்போது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் கடைகளை திறக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

அந்த வகையில் வேளாண்மை கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் நியமிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வேளாண் தொடர்பான துறையில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும்.

Exams Daily Mobile App Download

அத்துடன் சர்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சிவில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும். அத்துடன் இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை வழங்கப்படுகிறது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க https://drive.google.com/file/d/119kctJCqHBANV4m3tCizQhsqtzo5jHYV/view என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் , மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, # 713 & 714, மாவட்ட ஆட்சியர் 7வது தளம் , திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 10ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.  மேலும் இது தொடர்பாக விவரங்களை அறிய 0421-2999723 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!