முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிப்படும் மக்கள் – அரசு எடுக்கும் முடிவு என்ன?

0
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிப்படும் மக்கள் - அரசு எடுக்கும் முடிவு என்ன?
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிப்படும் மக்கள் - அரசு எடுக்கும் முடிவு என்ன?
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிப்படும் மக்கள் – அரசு எடுக்கும் முடிவு என்ன?

கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் முழு ஊரடங்கை தளர்த்துவது சரியான நடவடிக்கை அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வு

சீனாவின் ஷாங்காய் நிதி மையம், கடுமையான கொரோனா வைரஸின் BA.2 மாறுபாட்டின் பாதிப்புகளுக்கு பிறகு கடந்த சில வாரங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நகரத்தில் தற்போதைய முழு ஊரடங்கு நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பயங்கரமாக இருப்பதாக பலர் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், நகரவாசிகள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விரக்தியில் அலறுவதாக தெரிகிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 கடைசி நாள்!

ஏனென்றால் வாரக்கணக்கிலான பூட்டுதல்களைத் தாங்கி, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாமல் ஷாங்காய் நகர மக்கள் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதாவது, ஷாங்காய் நகரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சீன அரசாங்கம் ரேஷன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை குடியிருப்பாளர்களின் வீட்டு வாசலில் இறக்கி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாக சமூக ஊடக பதிவுகள் வெளியாகியுள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி?

இதற்கிடையில் ஷாங்காயில் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளின் செல்லப்பிராணிகளை வீடுகளில் இருந்து அழைத்துச் செல்வது, இராணுவம் தெருக்களில் ரோந்து செல்வது மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காக மாவட்டங்கள் முழுவதும் மக்கள் கலவரம் செய்வது போன்ற பிற வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இப்போது 25,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வழக்குகளைப் பதிவு செய்த போதிலும், நேற்று முதல் ஷாங்காயின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் புதிய தினசரி வழக்குகள் ஆயிரமாக பதிவு செய்யப்பட்ட நேரத்தில் தளர்த்தல் நடவடிக்கை ஆபத்தானது என்றும் விமர்சித்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!