பண்டிகைகளுக்கு மக்கள் கூட அனுமதிக்க கூடாது – ஒன்றிய அரசு அவசர கடிதம்!
நாடு முழுவதும் 2ம் அலை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதுமாக பண்டிகைகளுக்காக மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது.
அவசர கடிதம்:
கொரோனா தொற்று தீவிரமாக முதல் மற்றும் இரண்டாம் அலை என நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 2ம் அலையை தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 3ம் அலையாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
தினசரி இரவு 10.30 மணிமுதல்..! செப்.15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
இந்த மாதம் பல்வேறு பண்டிகைகள் அதிகம் இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் அதிகமாக கூடுவது காரணமாக நோய்த்தொற்று தீவிரமாக பரவும். எனவே பண்டிகைகளுக்காக மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதனால் நோய் தொற்று தீவிரமாக பரவும் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் கூடுவதை தடுக்க மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளை உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி உள்ளார். மேலும் நோய்த்தொற்று கண்டறிதல், சிகிச்சை கண்காணிப்பு, தடுப்பூசி உள்ளிட்ட 5 செயல்முறைகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.