தமிழகம் வந்த சிங்கப்பூர் பயணிக்கு ஓமைக்ரான் தொற்று? அச்சத்தில் மக்கள்!!
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நபருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதையடுத்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்குகள் விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் முழுவதும் குறைக்கப்பட்டது. தடுப்பு பணியின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. இதன் விளைவாக ஓரளவு தொற்று குறைந்து மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் ஓமைக்ரான் பாதிப்புகள் மீண்டும் அதிகமாகி வருகிறது.
டிச.6 முதல் ஜன.1 வரை மீண்டும் முழு ஊரடங்கு? மாநில அரசு திடீர் உத்தரவு!!
அதனால் தடுப்பூசி செலுத்தாத மக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகளை செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் 21 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
மேலும் உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஓமைக்ரான் வைரஸ் பரவலாக இருக்கோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் மேலும் அந்த பயணிக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.