டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கொரோனா பரவல் அபாயம் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளார்.

குற்றால அருவிகள்:

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என்று மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இது அதிக வேகத்தில் பரவும் தொற்று வகையை சேர்ந்தது. இதனால் பொதுமக்கள் தொற்று பரவல் அதிகரித்து இருக்கும் காலங்களில் பொது வெளியில் நடமாட தடை விதித்து ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காலங்களில் பொது போக்குவரத்து, பொது இடங்களுக்கு செல்ல தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது. இதனால் சுற்றுலாவிற்கு அரசு கடும் தடைகளை விதித்திருந்தது. மேலும், தொற்று பரவல் அதிகமாக இருந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழக ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை – அரசுக்கு கோரிக்கை!

இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இது போன்ற அருவிகளில் குளிக்கும் போது மக்கள் ஒருவருக்கொருவர் அருகில் நிற்பது போன்ற சூழல்களால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வந்து, தொற்று பரவல் அபாயம் குறைந்து மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளின் முழு விபரங்கள் இதோ!

இந்நிலையில், பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தொற்று அபாயமும் குறைந்துள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் குளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!