தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் மிகவும் தீவிரமாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி அளிக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நீடித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மிகவும் எடுக்கப்பட்டது. அதிக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது. இதனால் முதல் அலை சற்று கட்டுக்குள் வந்தது. பின்னர் மக்கள் இயல்பு நிலை திரும்பிய பின்னர் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். ஆனால் மீண்டும் 2021 மார்ச் மாதம் முதல் 2ம் அலை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் – முக்கிய விவரங்கள் இதோ!

பின்னர், தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைய தொடங்கிய காரணத்தால் ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பாதிப்புகள் குறைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் துறைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தற்போது மக்களுக்கு அச்சத்தை அதிகரிக்கும் விதமாக புதிதாக மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் கர்நாடகா மாநிலத்தில் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா எல்லைக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.14 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி அவர்கள் கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட், தியேட்டர், திருமண மண்டபம், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், வங்கிகள் உட்பட அனைத்து பொது இடங்களுக்கும் செல்ல தடி விதித்து உத்தரவிட்டார். இதனால் அனைத்து நிர்வாகத்தினரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களை தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வர அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு, தேன்கனிக்கோட்டையிலுள்ள இந்தியன் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அனைவரும், நேற்று தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழுடன் குவிந்து விட்டனர். அனைவரையும் சோதித்து பின்னர் தான் வங்கிக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!