ஓய்வூதியதாரர்களுக்கு இனி பென்ஷன் பற்றி எந்த கவலையும் இல்லை – அரசு செய்துள்ள சிறப்பான சம்பவம்!
நம் நாட்டில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பணம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது அவர்களுக்காக அரசு ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு நோ டென்ஷன்:
பல காலமாக ஓய்வூதியதாரர்கள் புலம்பி தவிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் தங்களுக்கு பென்ஷன் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சனை எழும்போது அதை அதிகாரிகளிடம் வேகமாக தெரிவிப்பதற்கு வழிகள் இல்லை என்பது தான். இந்த புகார் அரசிடமும் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசு ஒரு சிறந்த தீர்வை அதற்கு வழங்கியுள்ளது.
அதாவது தங்களின் குறைகளை தெரிவிக்க அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இலவச டோல் ஃப்ரீ எண்களை 1800-2200-14 அறிமுகம் செய்துள்ளது. மேலும் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்சன் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கலாம்.
அக். 10 (நாளை) உங்க பகுதிகளில் பவர் கட்டா? – முக்கிய விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலே குறிப்பிடப்பட்ட இலவச டோல் ஃப்ரீ சேவை வார இறுதி நாட்களை தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு 020-71177775 என்ற எண்ணுக்கு Voice mail மூலமாகவும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் இவ்வாறு புகார் தெரிவித்தும் சரியான முடிவு எட்டவில்லை எனில் ஓய்வூதியதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்