தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஆசிரியா் கூட்டணி வேண்டுகோள்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவின் ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். இதனை சுட்டிகாட்டி தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – முதல்வரின் முடிவு என்ன?
இந்த பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைத்தது. இக்குழு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தது. அதனை அறிக்கையாக சமர்ப்பித்து அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து அரசு விரைவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் தற்போது உள்ள நிதி நெருக்கடி நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவது கேள்வி குறியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் 2009-க்கு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கான, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அதனை தொடர்ந்து தொடக்க கல்வி துறையின் உரிமைகளை பறிக்கும் 101, 108 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.