EPFO ஓய்வூதியதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 3 மடங்கு ஓய்வூதிய உயர்வு? முழு விவரம் இதோ!
வருங்கால வைப்பு நிதி திட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான குழு கூட்டம் அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கிறது. 3 மடங்கு வரைக்கும் கூட ஓய்வூதியம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதிய திட்டம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்களுக்கு அவ்வப்போது கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு பயனாளர்களுக்கு பென்ஷன் அதிகரிப்பது தொடர்பான மத்திய அறங்காவலர் குழு கூட்டம் அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. குறைந்தபட்சமாக EPFO ஓய்வூதியதாரர்களுக்கு 3 மடங்கு ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரைக்கும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக 6.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO-ன் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்குதாரரின் முதலீட்டின் வரம்பு அதிகரிப்பது பற்றியும், cbd Equity வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள் இதோ!
மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பயனாளர்களுக்கு 2021-22 நிதியாண்டிற்கான வட்டிவிகிதத்தை 8.1 சதவீதம் அளவுக்கு உயர்த்தியது. இந்த கூடுதல் வட்டி விகிதத்தினால் கிட்டத்தட்ட 65 மில்லியன் சந்தாதாரர்கள் நசுக்கப்பட்டு வருகின்றன. இதனால், வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது, இந்த வட்டி விகிதம் உயர்த்தியது தொடர்பாக நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழுவின் கூட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், EPFO பயனாளர்கள் 3 மடங்கு ஓய்வூதியத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.