மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் – முக்கிய அறிவிப்பு!

0
மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் - முக்கிய அறிவிப்பு!
மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் - முக்கிய அறிவிப்பு!
மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் – முக்கிய அறிவிப்பு!

தற்போது சுமார் 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க ஹிமாச்சல் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஓய்வூதியத்திருத்தம் காரணமாக ஆண்டுக்கு ரூ.1,785 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் அறிவிப்பு

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பிப்ரவரி 1 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஜனவரி 1, 2016 முதல் டிசம்பர் 31, 2021 வரை ஓய்வு பெற்ற சுமார் 43,000 ஊழியர்களும் திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவானது, முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இப்போது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 2016 ஜனவரி 1 முதல் மாதம் ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜனவரி 1, 2016 முதல் கருணைத் தொகையின் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது என்பிஎஸ் ஊழியர்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியாவுக்கு உதவும் எழில் – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் கூடுதல் ஓய்வூதிய பலன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மாநில அரசு, ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் 31 சதவீத அகவிலைப்படியை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த ஓய்வூதியத் திருத்தம் காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,785 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,450.44 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!