தமிழக ரேஷன் கடைதாரர்களுக்கு ஓய்வூதியம்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான பல அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் ரேஷன் கடைகள் தான் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்னதாக ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை அரசு ஆலோசிப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது. தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான் – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அப்போது, மத்திய அமைச்சர்கள் தமிழக ரேஷன் கடைகளை ஆய்வு செய்தனர். நாட்டிலேயே தமிழ்கத்தில் தான் ரேஷன் கடைகள் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், ரேஷன் கடை ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.