தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & நிலுவைத்தொகை – வலுக்கும் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தாக்கத்திற்கு பிறகு கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி 2 கட்டமாக உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது அகவிலைப்படி 31% ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. மேலும் 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு & ஓய்வூதியம் – வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மத்திய ஊழியர்களை போல 34% அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை ஆறு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமலேயே நிலுவையில் இருந்து வருகிறது. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் கடந்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.