தமிழக 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு!

0
தமிழக 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு!
தமிழக 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு!
தமிழக 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊதிய உயர்வு

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரையில் கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்டவர்களுக்கான ஊதிய விகிதங்கள் வழங்கப்பட்டது. மேலும் இதிலுள்ள முரண்பாடுகளை களைய ஒரு குழு நியமிக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி, கல்வி, உள்துறை, வருவாய், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்த அறிவிப்புக்கு எதிராக 4500 பேருக்கு ஊதிய உயர்வு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

JEE தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!

இதனை போல வேளாண் துறையில் பணிபுரிந்து வருகிற 18 தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகியோர் தங்களுக்கும் ஊதிய உயர்வு சலுகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் கூறியதாவது, கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்ட்டவர்களுக்கு 2010ம் ஆண்டு 7 வது குழு பரிந்துரையின்படி இவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் இந்த சலுகைகள் அரசு துறைகளில் வழங்கப்பட்டிருந்தால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், இரு தரப்பு விவாதத்தை ஆராய்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு 7வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள அறிக்கையின்படி, 2009ம் ஆண்டுக்கு பின் தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்படுள்ளதா என்று அறிக்கை தயார் செய்ய வேண்டும். மேலும் இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!