அதிரடி சம்பள உயர்வு, திடீர் பதவி உயர்வு – அசர வைக்கும் ஐடி துறை!
கொரோனா காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக பல தொழில்துறையும் நலிவடைந்து உள்ள நிலையில், ஒரு துறை மட்டும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மேலும், வழக்கத்தை விட அதிக லாபத்தையும் அடைந்து வருகிறது.
ஐடி துறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்துறையும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல துறைகளிலும் வேலையிழப்பு, பணி நீக்கம், சம்பள குறைப்பு போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளது. கொரோனா காலத்தில் ஜிடிபியானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது.
தமிழகத்தில் செப்.15க்குள் உள்ளாட்சி தேர்தல் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
இந்நிலையில் கடந்த நிதியாண்டில் சில ஐடி நிறுவனங்கள் வழக்கத்தை விட அதிக லாபத்தை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல புதிய ஒப்பந்தங்களையும் செய்துள்ளனர். இதனால் இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிலும் ஒரு சில நிறுவனங்கள் வருடத்திற்கு இரண்டு முறை சம்பள உயர்வை அறிவித்துள்ளது. புதிதாக அதிக அளவில் பணியாளர்களையும் பணி அமர்த்தியுள்ளது.
நாஸ்காம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், ஐடி துறையானது 2.5 லட்சம் ஊழியர்களை மேம்படுத்தியுள்ளதாகவும், 40,000 பேருக்கும் அதிகமானவர்களை டிஜிட்டல் திறன் மிக்க திறமைசாலிகளாக மாற்றி பணியமர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், 2025ம் ஆண்டில் ஐடி துறையானது 300 – 350 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட, பிரம்மாண்ட வளர்ச்சி காணும் வலுவான துறையாகவும் மேம்படும் என நாஸ்காம் கூறியுள்ளது.
இனி வரும் காலங்களிலும் ஐடி துறை அதிக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி துறையினர் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் சூழல் இருந்து வருகின்றது. சில ஐடி நிறுவனங்கள் பிளெக்ஸி முறைக்கு மாறி வருகின்றன. இந்த பிளெக்ஸி முறையினால் நிறுவனங்களுக்கான செலவினங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக இன்ஃபோசிஸ் கடந்த நிதியாண்டில் 19,351 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டில் 16,594 கோடி ரூபாயாகவும் இருந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த நிதியாண்டில் 33,388 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 32,340 கோடி ரூபாயாக இருந்தது. விப்ரோ நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த நிதியாண்டில் 10,794.6 கோடி ரூபாயாகவும், முந்தைய ஆண்டில் 9,721.8 கோடி ரூபாயாகவும் இருந்தது.