பார்வதியை காணாமல் தவிக்கும் குடும்பம், செல்வம் மீது சந்தேகப்படும் சந்தியா – “ராஜா ராணி 2” அடுத்த வாரம்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதியை காணாமல் பல இடங்களில் குடும்பத்தினர் தேடி அலைய அவர் பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் சந்தியாவிற்கு செல்வத்தின் மீது தான் அனைத்து சந்தேகமும் வர செல்வம் மீது போலீசிடம் புகார் தெரிவிக்கின்றனர்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி, பாஸ்கர் திருமணத்தை விக்கி நிறுத்த முயற்சி செய்ய ஆனால் சந்தியாவின் முயற்சியால் பல தடைகளை தாண்டி திருமணம் நடக்கிறது. இந்நிலையில் பார்வதி கடைக்கு செல்ல தீவிரவாதியான செல்வம் அவரை கடத்தி விடுகிறார். அது தெரியாமல் குடும்பமே செல்வதை நம்பி கொண்டிருக்கின்றனர். நீண்ட நேரமாகி பார்வதி வராமல் இருக்க பார்வதியை காணாமல் பல இடங்களில் தேடி அலைகின்றனர். ஆனாலும் பார்வதி பற்றி எந்த தகவலும் இல்லை.
Exams Daily Mobile App Download
பல இடங்களில் தேடி, கடைசியாக பார்வதி செல்போன் கடையில் தான் இருந்ததாக காட்டப்படுகிறது. மேலும் பார்வதியின் கர்சீப், உடைந்த வளையல் துண்டுகள் என கடையில் பல ஆதாரங்கள் கிடைக்கிறது. ஆனால் செல்வம் கடைக்கு வரவில்லை என சொல்ல அவர் மீது சந்தியாவிற்கு சிறிது சந்தேகம் வருகிறது. மேலும் விக்கியின் அப்பா மீதும் சந்தியாவிற்கு சந்தேகம் இருக்கிறது. இருப்பினும் விக்கி அப்பா வீட்டில் தான் இருக்கிறார் என்பதால் செல்வத்தின் மீது சந்தேகம் அதிகமாகிறது.
அதனால் சந்தியாவும் சரவணனும் போலீசிடம் செல்வம் மீது சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். செல்வத்தை பிடித்த போலீசார் விசாரணை செய்கின்றனர். ஆனால் செல்வம் எந்த உண்மையும் சொல்லவில்லை. போலீசார் கடுமையாக அடித்து செல்வத்திடம் விசாரணை செய்ய அப்போது நான் ஒரு தீவிரவாதி தான் என்ற உண்மையை செல்வம் ஒப்புக் கொள்கிறார். பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்ற இருப்பதாக சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இதனை மீறி பார்வதியை சந்தியா காப்பாற்றுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்