தேசிய தலைநகரில் பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – பள்ளிகள் & உணவகங்கள் மூடல்!

0
தேசிய தலைநகரில் பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - பள்ளிகள் & உணவகங்கள் மூடல்!
தேசிய தலைநகரில் பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - பள்ளிகள் & உணவகங்கள் மூடல்!
தேசிய தலைநகரில் பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – பள்ளிகள் & உணவகங்கள் மூடல்!

சீனாவின் தேசிய தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டஜன் கணக்கான சுரங்கப்பாதை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் பகுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ் பள்ளிகள் மற்றும் உணவகங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு நாளில் மட்டும் 51 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதால் தற்போது பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெய்ஜிங் நகராட்சி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் கூறுகையில், ‘சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (மே 5) முதல் டஜன் கணக்கான சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் பள்ளிகள், உணவகங்கள் மற்றும் வணிகங்கள் கொரோனா பரவலை எதிர்த்து மூடப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் பெய்ஜிங்கிற்கு வரும் சர்வதேச வருகையாளர்கள் வழக்கமான 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக 10 நாட்கள் மையப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலுக்கும், ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். பெய்ஜிங்கில் கடந்த ஒரு நாளில் 51 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 500க்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டு வந்துள்ளது’ என்று கூறியுள்ளார். இப்போது, பெய்ஜிங் அரசாங்கம் கடுமையான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை விதித்து, இன்னும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை தாமதப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

அதாவது, பெய்ஜிங்கின் மழலையர் பள்ளிகள், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இடைநிலைத் தொழிற்கல்வி பள்ளிகள் அனைத்தும் மே 11ம் தேதி தொடங்குவதற்கு பதிலாக அடுத்த ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா நிலைமையைப் பொறுத்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர, விமானம் அல்லது ரயிலில் ஏறுவதற்கு முன், பெய்ஜிங்கிலிருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா எதிர்மறை சான்றிதழையும், பச்சை சுகாதார குறியீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கொரோனா ஆய்வுகள் மேம்படுத்தப்படும் என்றும் சாலை வழியாக பெய்ஜிங்கிலிருந்து புறப்படுபவர்களிடம் ஸ்பாட் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பசுமை சுகாதார குறியீட்டை வழங்க முடியாத எவரும் பெய்ஜிங்கிற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில், ஷாங்காயில் தொடர்ந்து 13 வது நாளாக கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்த நிலையிலும் ஒரு மாதத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!