காப்பக குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் ஆர்வம் – குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் அறிவிப்பு!!
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுவர்களின் பெற்றோர்கள் அழைக்கும் பட்சத்தில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
குழந்தைகள் காப்பகம்:
தமிழகத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாப்பதற்காக மாவட்டங்கள் தோறும் குழந்தைகள் காப்பகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கள் சிறு வயதிலேயே தீய பழக்க வழங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு கல்வி உரிமை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டது.
கல்லூரிகளின் தரத்தை உயர்த்த தனி குழுக்கள் – பல்கலைக்கு யு.ஜி.சி உத்தரவு!!!
கோவை மாவட்டம்:
அரசின் குழந்தைகள் காப்பகம் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு அதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முறையாக நிர்வகிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் மொத்தம் 50 குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகிறது. அதில், இதுவரை 810 குழந்தைகள் தங்கி உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் கோரிக்கை:
அனைத்து பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்பட்டு மேலும், அனைத்து வகுப்பினரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள காப்பகத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்து செல்ல விடுதி காவலர்களை அணுகி வருகின்றனர்.
அலுவலரின் பதில்:
இதனால் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சுந்தர் அவர்கள், “பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் காப்பகத்திலேயே தங்கி இருப்பார்கள். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் உள்ள குழந்தைகள் வீட்டிற்கு அழைத்து செல்ல அணுகும் பட்சத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள். காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தினசரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது”என்று அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்