தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது – பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது - பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது - பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது – பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊதியம்:

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை குறையை போக்க கடந்த ஆண்டுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த நிலையில் திமுக அரசு தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் பள்ளி விடுமுறை என்பதால் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்குரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.

மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இதனையடுத்து ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருதி மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி இயக்ககம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மேலும் மே மாதத்திற்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!