ஆகஸ்ட் 10 முதல் பகுதி ஊரடங்கில் நேர மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது சற்றே உயர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவதால் நாளை (ஆகஸ்ட் 10) முதல் ஊரடங்கு உத்தரவு நேரத்தை சில திருத்தங்களுடன் அமல்படுத்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு அறிவிப்பு
கடந்த 2 மாத கொரோனா பாதிப்பு விகிதங்களுடன் ஒப்பிடுகையில் அசாம் மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த மே மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, பகல் நேர முடக்கத்தை அரசு தளர்த்தியது. எனினும் நோய் பாதிப்பு அதிகம் காணப்படும் சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தி சில நேர தளர்வுகளை அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் 25 முதல் 9, 10 & 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
இருப்பினும் மாநிலம் முழுவதும் இரவு நேர பொது முடக்கமானது அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் படி ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளின் கீழ், தினசரி மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மளிகை கடைகள், பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், பால் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், தாபாக்கள் ஆகியவற்றிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம் சற்று மேம்பட்டு வருவதால், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் பகுதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி தினசரி மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.