குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வயது வரம்பில் தளர்வு? பெற்றோர்கள் கோரிக்கை!

0
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வயது வரம்பில் தளர்வு? பெற்றோர்கள் கோரிக்கை!
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வயது வரம்பில் தளர்வு? பெற்றோர்கள் கோரிக்கை!
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வயது வரம்பில் தளர்வு? பெற்றோர்கள் கோரிக்கை!

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் குஜராத் கல்வி உரிமை விதிகள் 2012ல் மாற்றம் கொண்டு வரப்பட்டு, 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த வயது வரம்பை தளர்த்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வயது வரம்பு:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மாநிலக் கல்வித் துறையால் குஜராத் கல்வி உரிமை விதிகள் 2012ல் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஜூன் 1, 2023 அன்றைய நிலவரப்படி 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே 2023-24ம் கல்வியாண்டிலிருந்து 1ம் வகுப்பில் சேர்க்கை அனுமதிக்கப்படுவர் என்று மாற்றம் செய்யப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் இந்த மாற்றத்தில் தளர்வுகள் கொண்டு வரப்பட வேண்டும் என பெற்றோர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள மனுவில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் குஜராத் கல்வி உரிமை விதிகள் 2012ல் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பிப். 2 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு – முன்னெச்சரிக்கை மக்களே!

ஆனால் இந்த அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் DEO அலுவலகங்கள் மற்றும் பிற கல்வித்துறையின் அலுவலகங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதனால் குழந்தைகளின் கல்வியாண்டில் இழப்பு ஏற்படாத வகையில் வயது வரம்பில் தளர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!