தனியார் பள்ளி மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு – பெற்றோர்கள் சாலை மறியல்!!
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் பள்ளி திடீரென மூடப்படுவதாக வந்த அறிவிப்பினால் அந்த பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பள்ளியின் முன்பு சாலை மறியல்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே மடுவாங்கரை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டங்களை கொண்டு செயல்படும் இப்பள்ளியில், LKG முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டுடன் இந்த பள்ளியை மூடப்போவதாக, கடந்த ஒரு வாரமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் – மகிழ்ச்சியில் மக்கள்!!
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று காலையில் பள்ளி மூடப்படுவதாக தகவல்கள் வந்தது. இந்த தகவலினால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று அலுவலர்களிடம் விசாரித்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் எந்தவித பதிலும் அளிக்காததால், மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் கிளாய் கூட்டு சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்த பின்னர், மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் அனைவரும் வளாகத்திற்குள் வந்தனர். இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பெற்றோர்கள், பள்ளியை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் பணிமாறுதல் எதிரொலி – மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!!
தீடீரென பள்ளியை மூடினால் நாங்கள் எந்த பள்ளியில் எங்கள் பிள்ளைகளை சேர்ப்போம். மாணவர்கள் அனைவருமே தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வேறு பள்ளிகளில் சேர்க்க இடம் கிடைக்காது. எனவே இந்த பள்ளி தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். பிற்பாடு பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். முன்னதாக போதிய வருமானம் இல்லாமல், நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பள்ளியை மூடுவதாக பள்ளிநிர்வாகம் தெரிவித்துள்ளது.