தங்க இடமில்லாமல் இருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகாவின் பெற்றோர் – ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து முகப்பருவை காரணம் காட்டி சீரியலில் இருந்து விலக்கப்பட்டார் என்ற செய்திகளுக்கெல்லாம் சொந்தக்காரராகிய சின்னத்திரை நடிகை விஜே தீபிகா தற்போது அவரது சொந்த உழைப்பால் தங்க இடமில்லாமல் இருந்த தனது அம்மா, அப்பாவுக்காக செய்த செயல் அவரை பிடிக்காதவர்கள் மனதைக் கூட உருகவைத்துள்ளது.
விஜே தீபிகா:
விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாகவே பல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் கடைக்குட்டி தம்பி கண்ணனுக்கு ஜோடியான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா இந்த சீரியலில் நடித்த சில நாட்களிலேயே தொடரை விட்டு விலக்கப்பட்டார். அதற்க்கு காரணம் முகப்பருக்கள் தான் என்று அவரே அளித்த செய்தி இணையத்தில் படு வைரலாக பரவியது.
Exams Daily Mobile App Download
அவர் அந்த சீரியலுக்கு பிறகு சில மாதங்கள் எந்த ஒரு ப்ராஜெக்ட்டிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் புது சீரியல் ஒன்றில் ஒரு ரோலில் நடித்து வருகிறார். மேலும் அவர் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். இவ்வாறு பல கஷ்டங்களை தாண்டி அவரது அம்மா அப்பாவுக்காக சொந்த வீடு ஒன்று கட்ட சின்ன வயதில் ஆசைப்பட்ட தீபிகா தற்போது அதை நிறைவேற்றும் வண்ணம் வீடு ஒன்று கட்டியுள்ளார்.
“குக் வித் கோமாளி” புகழை பற்றி வந்த பொய்யான தகவல் – அவரே வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!
அதாவது தீபிகாவின் பெற்றோர் ஏழ்மையில் வீடு கூட இல்லாமல் தான் இருந்திருக்கின்றனர். அதனால் இவர் அந்த குறையை போக்க சின்னதாக ஒரு வீட்டை கட்டி கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதற்க்கு கேப்சன் ஆக ” சின்ன வயசுல நம்ம டீச்சர்ஸ் பெரியவளாகி உங்க அம்மா அப்பாக்கு என்ன பண்ண போறீங்கன்னு கேட்டா எல்லாரும், வீடு கட்டி கொடுக்கணும்னு சொல்லுவோம். அது போலத்தான் எனக்கும் சின்னவயசுல இருந்தே சொந்தமா என்னோட அம்மா அப்பாக்கு என ஒரு வீடு கட்டணும்னு ஆசை வச்சேன். அதை இப்போ நிறைவேற்றும் வண்ணம் ஒரு வீடையும் கட்டிருக்கேன். அந்த வீடு பார்க்கறதுக்கு குட்டியா இருந்தாலும், இந்த வீடு என்னோட கனவு” என்று மனதுருக பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.