தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்!

0
தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அனுமதிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் 20201-2022ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்குவதாக அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அபாயத்தினால் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதனால் பாடப்புத்தகங்கள் பெறுவதற்கு என்று மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்!

இதனால் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் கவனத்திற்கு – அரசு வழங்கும் உதவித்தொகை! பெறுவது எப்படி?

இது தொடர்பாக அமைச்சர் இன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்கள் பல மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் மாணவர்கள் மன அழுத்தம் அடைந்துள்ளனர். மேலும், மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்படும். மேலும், புதிதாக பள்ளிக்கு வரும் 1ம் வகுப்பு மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்களும் வகுப்பில் இருக்கலாம்.

குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கொரோனா தொற்றை விட மிகப்பெரிய தொற்று குழந்தைகளின் மனநிலை தான் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில், இந்த கருத்தை கவனத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!